Tuesday, February 26, 2013

ஆஸ்துமா

உயிர் வாழ அடிப்படை தேவை மூச்சு, உணவு, நீர் இவை இல்லாமல் பல தினங்களாவது வாழலாம். ஆனால் மூச்சு விடாமல் சில நிமிடங்கள் கூட வாழ்வது கடினம். எனவே மூசசுத்திணறலால் அவதிப்படுபவரை பார்த்தாலே வேதனையாக இருக்கும். அந்த வகையில் தற்போது அதிகமாகி வரும் ஆஸ்த்துமா ஒரு வேதனை தரும் வியாதி. குழந்தைகளையும் ஆஸ்த்மா விடுவதில்லை.
ஆஸ்த்மா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆஸ்த்மா. கிரேக்க மொழியில் ஆஸ்த்மா என்றால் திணறுவது, தவிப்பது என்று பொருள்.
சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பு சுருங்குவது, மூச்சு விடுவதில் சிக்கல்களை உருவாக்கும். பிராங்கைல் டியூப் எனப்படும் காற்றுக் குழாய்கள் நுரையீரலுக்கு ஆக்சிஜனை எடுத்துக் சொல்லும் குழாய்கள். மூச்சுக் குழாய் தசைகளில் கசிவு ஏற்பட்டு வீங்கி விடும். உப்பிய தசைகள் மூச்சுக்குழாயை சுருக்கி அதன் துவாரத்தின் சுற்றளவை குறைக்கும். தவிர வழக்கத்திற்கு மாறாக பிராங்கைல் டியூப்ஸ் அதிக சளியை சுரக்கும். இந்த சளிகளும் கட்டிகள் போல கூடி மூச்சுக்குழாயின் பாதையை அடைக்கும். இழுப்பு எனப்படும் ஒசையுடனும், சிரமத்துடன் மூச்சு விடுவது நேரும். இது தான் ஆஸ்த்மா.
காரணங்கள்
சுவாசக் குழாய்கள் சுருங்குவதற்கு காரணங்களில் ஒன்று, குழாயின் சுவற்றில் உள்ள லைனிங் தசைகளின் முகவாய்கள் ஏறுமாறாக, இயங்கி தசையை சுருங்க வைப்பது. குழாய் சுவற்றின் திசுக்களும் அழற்ச்சி, தொற்றினால் வீங்கி, சளியை சுரந்து பாதையை அடைக்கின்றன. குழாய் சுவர்களின் உட்படையின் மேல் பாகம் சிதைந்து போகலாம். அதனால் சிதைந்த செல்களும் கூடி குழாயை சுருக்கும். சுவாசக் குழாயில் உள்ள மாஸ்ட் செல்கள் தான் குழாய் சுருங்குவதை தூண்டிவிடுகின்றன என்று கருதப்படுகிறது.
ஒரு ஆறுதல் ஆஸ்த்மாவால் ஏற்படும் சுவாசப்பாதை அடைப்பை நீக்கலாம்.
ஏன் சுவாச குழாய்கள் சுருங்குகின்றன இதற்கு அலர்ஜி ஒவ்வாமை காரணம். அலர்ஜி ஏற்பட காரணமாக, தூசி, புகை, பெயிண்ட் வாசனை, குளிர்காற்று, பூவின் மகரந்த துகள்கள், கொசுவர்த்தி சுருள்கள் பருவகால மாற்றங்கள், வீட்டில் வளர்க்கும் பூனை போன்ற பிராணிகள், மனச்சோர்வு அழுத்தம், சில உணவுகள் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். குங்குமம், வாசனை திரவியங்கள், பஞ்சு, சுண்ணாம்பு, ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், உளுந்து, சன்செட்யெல்லோ எனும் வண்ணம் – இவைகளும் இந்த பட்டியலின் அடங்கும். உணவுகளால் ஆஸ்துமா ஏற்படுவது அபூர்வம்.
அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், சுவாசக்குழாய்கள் சுவர்களில் உள்ள மாஸ்ட் செல்களின் மேற்பரப்பில் உள்ள இம்யூனோ குளோபின் ‘இ’ எனும் ஆன்டி பாடியுடன் இணைந்து, ஆஸ்துமாவை தூண்டிவிடும்.
வைரஸ் கிருமிகளும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.
உடற்பயிற்சி கூட ஆஸ்துமா உள்ளவர்க்கு, அதன் தாக்குதலை தோற்றுவிக்கலாம்.
சீதோஷ்ண நிலையின் தீடிர் மாறுதல்கள் ஆஸ்துமாவை தூண்டலாம்.
கோபதாபங்கள், சோகம்.
ஆஸ்துமாவை தூண்டும் பார்த்தேனியம்
களை, செடிகளிலிருந்து எழும்பும் மகரந்தத் தூளுடன் வரும் நச்சுப்பொருட்களால் ஆஸ்துமா மட்டுமல்ல, எக்ஸிமா, தோல் வியாதிகள் உண்டாகின்றன. டெல்லியில், உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் 30% நோயாளிகளுக்கு ஆஸ்துமா தாக்கிய காரணம் களைச் செடிகளிலிருந்து எழும்பும் மகரந்தத்தூள். பெங்களூரிலும் பார்த்தேனியம் செடிகள் அதிகம் காணப்படுகின்றன.
அறிகுறிகள்
ஆஸ்துமா தாக்குதல் எப்போது வரும். எவ்வளவு தடவை வரும், எவ்வளவு நேரம் இருக்கும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். முக்கிய அறிகுறிகள் மூச்சுவிடுவதில் சிரமம், இழுப்பு ஓசையுடன் கூடிய இழுப்பு, நோயாளி மூச்சை வெளி விடும் போது ஏற்படும். நெஞ¢ச¤ல¢ கபம் கட்டும் . முதல் தாக்குதல் நுரையிரல் இன் ஃபெக்ஷனுடன் தொடங்கலாம். அடுத்து வரும் தாக்குதல்கள் இதே போன்ற தொற்றால் வரலாம். ஏன், சாதாரண ஜலதோஷம் கூட ஆஸ்துமாவை தூண்டும்.

ச¤லருக¢கு தாக¢குதல¢ குறைவாக இருக¢கும¢.
இருமல¢ ஏற¢படும.¢ இரவ¤ல¢ அத¤கமாகும¢. அடுக¢குத¢ தும¢மலும¢ ஏற¢படலாம¢.
வ¤யர¢வை அத¤கமாக¤ நோயாள¤யால¢ அத¤கம¢ பேசமுடியாது.

ஆஸ¢துமாவ¤ன¢ போது ரத¢தத¢த¤ன¢ வெள¢ளை அணுக¢கள¢ (குற¤ப¢பாக ஈச¤னோஃப¤ல¢ஸ¢, ‘இம¢யூனோகுளோப¤ல¤ன¢ ‘இ’) அத¤கமாக காணப¢படும¢.
ச¤க¢கல¢கள¢
த¦வ¤ர தாக¢குதல¤ன¢ போது, நோயாள¤ எழுந¢து உட¢கார¢ந¢து, முன¢வளைந¢து முயன¢றாலும¢, மூச¢சுவ¤ட ச¤ரமப¢படுவார¢. இதனால¢ மனப¢பதற¢றம¢ ஏற¢படும¢. அத¤கம¢ பேசமுடியாமல¢ போகலாம¢. நோயாள¤க¢கு களைப¢பும¢ குழப¢பமும¢ ஏற¢படும¢. கையோனோசிஸ் இரத¢தத¢த¤ல¢ ஆக¢ச¤ஜன¢ குறைந¢தால¢ ஏற¢படும¢ உண¢டாக¤ ரத¢தம¢ குறைந¢து, உடல¢ ந¤ல ந¤றமாகும¢. இது ‘எமர்ஜென¢ச¤’. உடனே டாக¢டர¤டம¢ செல¢ல வேண¢டும¢. இந¢த த¦வ¤ர ந¤லைய¤லும¢ உடனடி ச¤க¤ச¢சையால¢ ந¤வாரணம¢ க¤டைக¢கும¢.
ச¤க¤ச¢சைமுறை
நல¢ல நவ¦ன மருந¢துகளால¢ ஆஸ¢துமாவை கட¢டுப¢படுத¢தலாம¢. மருந¢தை நேரடியாக நுரைய¦லுக¢கு செலுத¢த ‘இன¢ஹேலர்¢’ (Inhalers) கள் இருக்கின்றன. சுவாசக்குழாயை விரிவடைய செய்ய Brancho-dilators எனப்படும் துரிதமாக செயலாற்றும் மருந்துகள் உள்ளன. Nebuliser என்ற சாதனத்தாலும், மருந்துகளை விரைவாக உள் செலுத்தி உடனடி நிவாரணத்தை கொடுக்கலாம்.
ஆஸ்துமாவைப் பற்றி ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் ஆஸ்துமாவை தமகஸ்வாசம் என்கிறது. சம்ஸ்க்ருதத்தில் தம என்றால் இருட்டு என்று அர்த்தம். ஆஸ்துமா பொதுவாக இரவில் ஏற்படுவதால் இந்தப் பெயர்.
தமகஸ்வாசத்தில் இரண்டு உட்பிரிவுகள் – அவை
பிராதமகஸ்வாசம் – ஆஸ்துமாவுடன் ஜூரம் சேர்ந்து வந்தால், பிராதமக ஸ்வாசம் எனப்படுகிறது. இது ஒரு தீவிர தொற்றின் அறிகுறி.
சாந்தமகா ஸ்வாசம் – மனம் மற்றும் உடல்ரீதியான ஆஸ்துமா. மனஅழுத்தம் மற்றும் ஒவ்வாமையால் உண்டாவது. உடற்பயிற்சி, குளிர்காலம், அலர்ஜி, இவைகளும் இந்த டைப் ஆஸ்துமாவை உண்டாக்கும்.
ஆயுர்வேதக் காரணங்கள்
தவறான உணவு முறை. மசாலா செறிந்த உணவு, குளிர்ந்து போன உணவு, எளிதில் ஜீரணமாகாத உணவுகள், உடலுக்கு எண்ணைப் பசையை ஊட்டாத உலர்ந்த உணவுகள், முதலியன.
தவறான வாழ்க்கைமுறை – குளிர்ந்த நீரில் குளிப்பது, தூசி, புகை இவற்றை நுகர்வது, குளிர்காற்றில் அலைவது, மலச்சிக்கல் முதலியன.
ஆயுர்வேதத்தின் படி ஆஸ்துமா ஒரு கபநோய். ஆனாலும் வாத, பித்த
தோஷங்களில் பாதிப்பாலும் உண்டாகலாம். வாத ஆஸ்துமாவில் வறண்ட இருமல், இழுப்பு தாகம், சூடான திரவங்களை குடிக்க வேட்கை, உலர்ந்த வாய், உலர்ந்த சர்மம் – இவை காணப்படும். வாத நேரமான காலை, அந்திப்பொழுதில் வாத ஆஸ்துமா தாக்கும்.

பித்த ஆஸ்துமாவில் மஞ்சள் நிற சளியுடன் கூடிய இருமல், இழுப்பு இருக்கும். ஜூரம், வியர்த்தல், தோன்றும். பித்த நேரமான நள்ளிரவு, மத்யானத்தில் தோன்றும்.
கப ஆஸ்துமாவில் இருமல், அபரிமிதமான வெள்ளை நிறசளியுடன், ஒசையுடன் கூடிய இழுப்பும் இருக்கும். கபநேரமான காலை, சாயங்காலத்தில் தோன்றும்.
சிகிச்சை
வாமனம்: இது ‘பஞ்சகர்மா’ சிகிச்சையின் ஒரு அங்கம். மருத்துவரின் கண்காணிபபில், நோயாளி வாந்தி எடுக்க வைக்கப்படுவார்.
விரேசனம்: வாமனத்திற்கு பிறகு, உடலில் மிச்சம் மீதி இருக்கும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற, நோயாளிக்கு பேதியை உண்டாக்கும் சிகிச்சை தரப்படும்.
வீட்டுவைத்தியம்
ஆஸ்துமா தாக்கும் போது, அரை மணிக்கு ஒரு தடவை மார்பிலும், தோளிலும் வெந்நீர் ஓத்தடம் கொடுக்கவும்.
திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமா பாதிப்பு குறையும்.
நீராவி பிடித்தல் – கொதிக்கும் நீரிலிருந்து வரும் நீராவியை, தலையை துவாலையால் மூடிக்கொண்டு பிடிப்பது மூக்கடைப்பை நீக்கும்.
சூடான நீர் (அ) பால் – கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும்.
துளசி இலைச்சாறு (ஓரு டீஸ்பூன்) + தேன் (ஒரு டீஸ்பூன்) – மூன்று வேளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
வெங்காய சாறும் குடிக்கலாம்.
கடுகெண்ணை கிடைத்தால் அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது வெல்லத்துடன் சேர்த்து தினமும் இரு வேளை அளவில் 3 வாரம் உட்கொள்ளவும்.
உணவு கட்டுப்பாடு
குளிர்ச்சியான ஐஸ்கிரீம், தயிர், மோர், எலுமிச்சை இவற்றை தவிர்க்கவும். அலர்ஜியை உண்டாக்கும் உணவுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும். முட்டை, கொய்யாப்பழம், வெள்ளரிக்காய், இவற்றையும் விலக்கவும். உப்பு குறைவாக உணவு நல்லது. உளுந்து, வாழைப்பழம், இனிப்பு இவைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.
விட்டமின் ‘பி’ 6 உள்ள உணவுகள் ஆஸ்துமாவுக்கு நல்லது. முழுதானியங்கள், லிவர் (மாமிசம்) இறைச்சி, காய்கறிகள் இவற்றிலிருந்து இந்த விட்டமின் கிடைக்கும்.
குளிக்க மட்டுமல்ல, குடிப்பதற்கும் வெந்நீரை உபயோகிக்கவும்.
மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாத்துக்கொள்ளவும்.
ஆயுர்வேத மருந்துகள்
சியவன பிராசம்
அகஸ்திய ரசாயனம்
கனகாஸவ
கபகர்தரி
திரிபூவன் கீர்த்தி ரஸ
தலமூல ரசாயனம் (10 வேர்கள் சேர்ந்தது)
சீதோபலாதி சூரணம்
மேலும் சில குறிப்புகள்
உங்களுக்கு ஆஸ்துமாவை உண்டாக்கும் அலர்ஜி – ஒவ்வாத பொருள் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
வீட்டை, குறிப்பாக படுக்கறையை தூசி, ஓட்டடை இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். வாக்குவம் க்ளீனரை உபயோகிப்பது நல்லது.
குளிரிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும்.
ஏ.சி. யை உபயோகித்தால், அதன் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்யவும். வளியே செல்லும் போது, மூக்கின் உள் சிறிது நல்லெண்ணையை தடவிக் கொள்ளவும் தூசி மூக்கில் உட்புறம் போகாமல் இருக்கும்.
யோகா, பிராணாயாமா இவற்றை செய்யவும்.
ஆஸ்துமாவை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியுமா
ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஆஸ்துமா வராமல் பார்த்துக் கொள்ளலாம். தூசி, புகை உள்ள சூழலில் வசிக்கக் கூடாது. துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, நாய்ப்பாலை, ஆடாதொடை, திப்பிலி, மிளகு போன்றவை சுவாசக் கோளாறுகளுக்குச் சிறந்த மூலிகை மருந்துகளாகும்.

No comments:

Post a Comment