Tuesday, February 26, 2013

மன்மத கலையின் சரித்திரம்

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள”
பொருள்:- கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அநுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!

- திருக்குறள்

வையகத்தில் மனிதருக்கு மிகுந்த இன்பத்தை கொடுப்பதில் தலையானது உடலுறவு சுகம். மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை கல்வி சுகத்தை மேலும் மேலும் அனுபவிக்க பாலியல் ஊக்கிகளை தேடிக்கொண்டேயிருக்கிறான். சிருஷ்டியின் லட்சியம் இனப்பெருக்கம். அதனால் தான் இனப்பெருக்கத்திற்கு அத்தியாவசியமான உடலுறவை இவ்வளவு இன்பமானதாக இறைவன் வைத்திருக்கிறார் போதும்!
நமது தேசத்தில், காதல் தெய்வமாக கருதப்படுவது மன்மதன். பழைய கிரேக்க தேசத்தில் அஃப்ராடிடி (Aphrodite) பழங்கால ரோமர்களுக்கு வீனஸ் (Venus).
உலகின் மிக பழமையான ‘செக்ஸ்’ நூலாக, நமது தேசத்தில் கி.பி. 3ம் ஆண்டில் எழுதப்பட்ட வதஸ்யானரின் “காமசூத்ரா” வை சொல்லலாம். ஆயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டு நிற்கும் “காமசூத்ரா”, பகவத் கீதைக்கு அடுத்தபடியாக, வெளிநாட்டில் அதிகமாக விற்கும் இந்திய நூல் ஆகும். 12ம் நூற்றாண்டில் ‘கொக்கேகர்’ எழுதிய ‘கொக்கேகம்’ வெளிவந்த போது, வத்ஸ்யானரின் காலம் போலில்லாமல், ‘செக்ஸ்’ ஒரு ரகசிய சமாசாரமாக மாறிவிட்டது. எட்டிலிருந்து 14 நூற்றாண்டுக்குள், கல்யாண மாலாவின் ‘ அனங்கா ரங்கா’ வெளிவந்தது, இந்த மன்மதகலைநூல், இதற்கு முன் வந்த ‘காமசூத்ரா’, ரதிரகசியா, ‘ஸ்மரப்ரதீபா’, ‘ரதிமஞ்சரி’ மற்றும் ‘அபிலாஷித சிந்தாமணி’ போன்ற நூல்களை தழுவி எழுதப்பட்டது.
இந்த காலகட்டத்தில் ‘செக்ஸ்’ ஒரு ரகசிய விஷயமாகவும், கல்யாணமாகும் முன் ஆண் – பெண் உறவு மிகக்குறைவாகவும் இருந்து வந்தது. பால்ய விவாஹங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனைவியை தவிர வேறு பெண்களை அனுபவிக்கும் உரிமை பணம் படைத்தவர்கள், அரசர்கள், விலைமகள்கள் இவர்களுக்கே இருந்தது. 15ம் நூற்றாண்டில் மாண்டுவின் கில்ஜி சுல்தான் தனது அந்தபுரத்திற்கென்றே ஒரு நகரத்தை உருவாக்கி, அதில் தனது சுகத்திற்காக 15,000 பெண்களை வைத்திருந்தாக சொல்லப்படுகிறது.
பாநுதத்தரின் “ரசமஞ்சரி” விரசமில்லாமல் எழுதப்பட்ட நூல், இந்தியாவின் பாலியல் உணர்வுகளை பறைசாற்றும் சிற்பங்களை கஜுராஹோ, கொனராக், இந்த இடங்களில் காணலாம். பலர், காஜுராஹோவில் உள்ள ஆண் பெண் “பொசிஷன்களை” செய்து பார்க்க ஆணுறுப்பு 2 அடி நீளமாவது இருக்க வேண்டும் என்று கிண்டல் செய்தாலும், கஜுராஹோ சிற்பங்கள் பிரமிப்பூட்டும் காதல் சிற்பங்கள்

No comments:

Post a Comment