Tuesday, February 26, 2013

ஆண்மைக் குறைவில் பெண்ணின் நிலை

பொதுவாகவே பெண்கள் அனைத்து பிரச்சனைகளையுமே தன்னுள் போட்டு புதைத்து வைத்து கொள்ளும் தன்மையை உடையவள். தன்னையே குறை கூறிக் கொள்ளும் சுபாவம் உடைவள். இதன் காரணமாக அவள் தன் கணவரின் ஆண்மைக் குறைவுக்கு தான் தான் காரணம் என்றும், தான் இளமையில் முன்பு இருந்ததைப் போல இப்போது அழகாக இல்லை என்றும், தன்னிடம் இளமைக் கவர்ச்சி மிகவும் குறைந்து விட்டது என்றும் எண்ணி வருத்தப்படுவாள். ஆண்மைக் குறைவு என்பது ஆணின் பல வகையான பிரச்சனைகளை உள்ளடக்கியதாகும். அவற்றில் கணவனின் விறைப்பு தன்மை இல்லாமை (Erectile Dysfunction) என்பது ஒரு மனைவியை மிகவும் மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடியதாகும். விறைப்பு இல்லாமை என்பது… ஒரு ஆணின் முழுமையான உடலுறவுக்கு தேவையான விறைப்பு இல்லாததையும், போதுமான நேரம் விறைப்புத் தன்மை நீடிக்காமல் இருப்பதையும் உள்ளடக்கியதாகும். விறைப்பு இல்லாமை எல்லா ஆண்களுக்கும், அவர்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் கட்டாயம் ஏற்படும் ஒரு நிலைமை. மன அழுத்தத்துக்கு உள்ளாவது, மனச் சோர்வு நிலை, பயம் கொள்வது, கவலைப்படுவது… போன்றவற்றால் ஏற்படலாம். இந்த நிலைமை சில ஆண்களுக்கு ஒரு சில நாட்கள் மட்டும் இருந்து தானாகவே மறைந்து, சகஜ நிலைமையினை அடைந்து விடலாம். சில ஆண்களுக்கு அதுவே முற்றிய நிலையை அடைந்து, முழுவதுமாக விறைப்பு இல்லாமல் போய் விடுவது உண்டு.
பெண் தனது கணவனின் விறைப்பு இல்லா நிலைமைக்கு தான் தான் காரணமோ என்று எண்ணுவது போல, சில ஆண்கள் விறைப்பு இல்லாமைக்கு, தனக்கு இளமை குறைந்து விட்டது என்றோ, தனக்கு வயது அதிகமாகி விட்டது என்றோ தான் எண்ணுகிறார்களே தவிர… இப்படி ஏற்படக் காரணமான பிற உடல் நலக் குறைகளைப் பற்றி கவனத்தில் கொள்ள தவறி விடுகின்றனர். இது போன்ற குறைபாடு தோன்ற சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் அழுத்த பிரச்சனை, உடம்பில் அதிகரித்துவிட்ட கொலஸ்ட்ரால் அளவு, இதய நோய்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்பதை அறிய மறந்து விடுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகளுக்காக சாப்பிடுகிற மருந்துகளின் பக்க விளைவாகக் கூட இருக்கலாம் என்பதும் பல ஆண்களுக்கு தெரிவதில்லை.
ஒரு கணவனுக்கு முதல் முறையாக விறைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படுகிற போது… ஏன் இப்படி ஏற்படுகின்றது, என்று பலமான கவலை மனைவியை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது. இதனால் அவள் பலவாறாக சிந்திக்கிறாள். நாம் முன்பை விட இப்போது அழகாக இல்லையோ? இவருக்கு தன்னை பிடிக்கவில்லையோ? வேறு எந்த பெண்ணுடனாவது இவர் தொடர்பு கொண்டுள்ளாரோ? இதனால் ஏற்பட்ட வெறுப்பு தான் காரணமோ? என்றெல்லாம் கூட பல கோணங்களில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறாள்.
இப்படி எழுகிற சந்தேகங்களை எல்லாம் மனச் சிறையிலேயே போட்டு புதைத்து வைத்துக் கொண்டு தனக்குள்ளேயே புழுங்கிக் கொள்கிற பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் சில பெண்கள் வெளிப்படையாக தனது சந்தேகத்தினை கணவனிடம் கொட்டித் தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதன் விளைவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, கோபம், சண்டைச் சச்சரவு என ஆரம்பிக்கலாம். பெண்கள் ஆணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் தேவையற்ற கோணங்களில் சிந்தித்து… பிரச்சனை பலூனை ஊதி ஊதி பெரிதாக்கி விடுவார்கள். இதன் காரணமாக இருவரும் இணைந்து குடும்பத்தில் பொதுவான விஷயங்களைக் கூட மனம் விட்டு பேசிக் கொள்வது அரிதாகி விடலாம். இத்தகைய தவறான எண்ணங்களை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், கணவன் மனைவி இரண்டு பேரும் மனம் விட்டு… கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும். ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளை பெறுவது, தேவைப்பட்டால் மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றினை மேற் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டால் பிரச்சனை மோசமாகி விடும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆணின் செக்ஸ் உணர்வையும், பெண்ணின் செக்ஸ் உணர்வையும் அதிகரிக்க நிறைய மருந்துகள் உள்ளன. ஆண் முழுமையான விறைப்பைப் பெற்று அதிக நேரம் உடலுறவு கொள்வதற்கும் நல்ல, பக்கவிளைவுகளற்ற மருந்துகள் உள்ளன. ஆணின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ‘பூனைக்காளி’ என்ற மருந்து உள்ளது. ஆணின் நரம்புகளை முருக்கேற்றும் செக்ஸ் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் அமுக்கிரா கிழங்கு உள்ளது. அதிக நேரம் விறைப்பு நீடிக்க கோரைக் கிழங்கு, முருங்கை விதை, முருங்கைப் பிசின் போன்றவையும் உள்ளன. பாலியல் உணர்வை அதிகப்படுத்தும் அக்கிரகாரம் போன்ற மருந்தும் உள்ளது.
இவைத் தவிர உணவில் எள்ளு, பால், தேன், பிஸ்தா, பாதாம், குங்குமப்பூ, சிறிய வெங்காயம், முருங்கைக் காய் போன்ற பொருட்களை அதிகம் சேர்த்து வந்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்.
ஆணின் உடல் ஆரோக்கியமும், செக்ஸ் செயல்பாடும் ஆணிடம் மட்டுமல்ல; பெண்ணின் கையிலும், மனசிலும் உள்ளது என்பதனை பெண் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
இந்த விஷயங்கள் தனியே தரப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக மணவாழ்கைக் கொண்டிருக்கும் தம்பதியர் களிடையே, மறைமுகமான ஒரு மனக்குறைபாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தம்பதியர்களுக்கு இடையே இருக்கின்ற பாலியல் ஓத்தியல்பு (Sexual Compatibility) என்பது இயற்கையில், தன்னிச்சையாக ஏற்படுவது என்று தான் பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றனர். உண்மையில் அது போன்று எதுவும் இல்லை. பாலியல் ஓத்தியல்பு கொண்ட தம்பதிகளாக மற்றவர்களுக்கு தோற்றம் அளிக்கின்ற பல பேர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் தான். அதாவது, தங்களின் தேவைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். சிலருக்கு இது எளிதாக, இயல்பாகக் கைக்கூடி வந்திருக்கும். இன்னும் சிலர் பல முயற்சிகளுக்குப் பின்னர் இந்நிலையை அடைந்திருப்பார்கள். இல்லற வாழ்வின் இனிமையான ரகசிய வித்தையினை உணராத பல தம்பதியர் எங்களது மணவாழ்க்கை ஒத்தியல்பு கொண்டதல்ல (We are incompatible) என்று கூறி, பாலுறவில் பற்றற்று வாழ்கின்றனர்.
பாலுறவுக்கு எந்தவிதமான அளவுகோலும் இல்லை. காலத்துக்கு காலம் இது மாறக் கூடியதாகும். வெற்றிகரமான மணவாழ்க்கையை நீண்டநாள் வாழ்பவர்கள் கூட சில நேரங்களில் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போகத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஒத்தியல்பு இல்லாதவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இனிமை காண வேண்டும்.

No comments:

Post a Comment