Monday, December 31, 2012

திருவேணி அம்மன் கோயிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்


திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் சிவன்வாயல் கசமேடு திருவேணி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் டிச. 5ம் தேதி நடக்கிறது. இன்று காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். நாளை சிவயோகி சுப்பிரமணிய சுவாமிகளின் பிரசங்கம், மாலை சைவ திருமணி ரகுபாய் ஆன்மிக கருத்தரங்கம் நடக்கிறது. ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் அஷ்ட பந்தனம் சாற்றுதல், இரவு சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. 5ம் தேதி காலை 8 மணிக்கு ஞான தபோவனம் திறப்பு விழா, தெய்வீக திருக்குடங்கள் ஞான உலா, காலை 10 மணிக்கு கருவறை விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் உடனாக திருவேணி அம்பிகைக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெயராமன், சண்முகம் சகோதரர்கள், நடராஜ மூர்த்தி, சிட்டிபாபு மற்றும் கிராம மக்கள் செய்து உள்ளனர். 

No comments:

Post a Comment