Monday, December 31, 2012

தோஷம் போக்கும் பைரவர் வழிபாடு



அஷ்டமி திதி மற்றும் ஆயில்யம், சுவாதி, மிருக சீரிஷம் நட்சத்திர தினங்களில் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் தேடி வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவரை அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து எம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணைய், விளக்கு எண்ணைய் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.

அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இழந்த பொருட்களை மீண்டும் பெற திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைபேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப்பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டால் விரைவில் அத்தம்பதியருக்கு குழந்தை செல்வம் கிட்டும். 

No comments:

Post a Comment