Monday, December 31, 2012

நன்மைகள் அளிக்கும் நவராத்திரி திருவிழா


இந்தியாவில் விழாக்களுக்கு பஞ்சமே இல்லை. இந்துக்களின் பண்டி கையில் நவராத்திரிக்கு தனி இடமுண்டு. 10 நாட்கள் கொண்டா டப்படும் இந்த விழா தீமையை அழித்து நன்மைகளை கொண்டு வருவது என்று அனைத்து சமூகத் தினரும் நம்புகிறார்கள். விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் வடமொழியில் 10 என்று பொருள். வடமாநிலங்களில் துர்கா பூஜை என்று அழைக்கப்படும் இந்த விழா செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படும் விழா 10 வது நாள் விஜயதசமியையும் சேர்த்து தசரா என்று அழைக்கப்படுகிறது. சமத்துவம், அன்பு, தெய்வீக தன்மையை வெளிப்படுத்தும் சமூக விழாவாக இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.

இந்தியா தவிர ஜவா, சுமத்ரா, ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளிலும் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் தேசிய திருவிழா தசரா ஆகும். மராட்டிய மன்னன் சிவாஜி எப்போதும் தனது இஷ்டதெய்வம் பவா வடிவில் துர்காவை வணங்கிவிட்டுத்தான் காரியங்களை தொடங்குவார். சீக்கியகுரு கோவிந் தசிங்கும் துர்காவை வழிபட்டுள்ளார். பழங்குடி மக்கள் துர்கா வழிபாட்டை சிறப்பாக நடத்துகிறார்கள். வடஇந்தியாவில் அறுவடை காலங்களில் இந்த விழா தொடங்குவதால் புதிய அறுவடை சீசன் மற்றும் தானிய உற்பத்தி சிறப்பாக நடைபெற இந்த நவராத்திரி வழிபாட்டை நடத்துகின்றனர்.

களிமண்ணால் செய்யப்பட்ட துர்கா சிலைகளை நதிகளில் கரைக்கும்போது பூஜை மஞ்சள் மற்றும் சக்திவாய்ந்த கிருமிநாசினிகள் நதிநீரில் கலந்து விடும். இந்த நீரை பயிர்களுக்கு பயன்படுத்தும்போது நல்ல விளைச்சல் தரும் என்பது நம்பிக்கை. ராமாயணத்திலும் ராவணனை கொல்ல ராமன் சாண்டி பூஜை நடத்தி
உள்ளார். அப்போது ராவணனை கொல்வதற்கான ரகசியத்தை துர்கா, ராமனிடம் தெரிவித்தார். அதன்பின்னர் ராவணனை ராமன் வதம் செய்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பியதாக புராண கதை தெரிவிக்கிறது. இது ராம்லீலா என்ற பெயரில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விமரிசையாக நடத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment