Monday, December 31, 2012

மகர ஜோதி

”மகர ஜோதி” என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2011 ஜனவரி 14ஆம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். (இறந்தவர்களில் மலையாளிகளே இல்லை). இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேனல் எடமருகு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர்.

அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.

திட்டமிட்ட நாடகம்!

சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் காவல்துறையினர், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம்.

பெரிய பாத்திரத்தில் சூடத்தை (கற்பூரத்தை) ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே.

மனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூடநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர்.

இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25ஆவது பிரிவுகளை மீறிய செயல்.
( அதுசரி, முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்களுக்கு இது எம்மாத்திரம்)

கடந்த 1999ஆம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்ட , சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடவுள் விஷயத்திலேயே ஒரு அரை நூற்றாண்டு தமிழகத்தையும், மற்ற மாநிலங்களையும் ஏமாற்றியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் ஏமாற்றுவதா பெரிய விஷயம் !
சாமியே சரணம் அய்யப்பா ! அப்பப்பா !!

ஆதாரங்களுடன் கூடிய காணொலி :

http://www.youtube.com/watch?v=h0L9LkVj_vY&feature=related

http://www.youtube.com/watch?v=DDYp9htK0g8&feature=related

http://www.youtube.com/watch?v=L4zZvaff31I&feature=related

கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்

No comments:

Post a Comment