Monday, December 31, 2012

ஸ்ரீ அஷ்டபுஜ காளகன்ட பைரவர்


வேலூர் மாவட்டத்தில் இரஙகாபுரம் மலைமேல் உள்ளது இந்த திருக்கோயில்.கோபுரங்கள் இல்லாத சுற்றி பாதி சுவர் மட்டுமே உள்ள காள பைரவர் சன்னதி இது. காள பைரவர் எல்லாக்கோயில்களிலும் காவல் தெய்வமாகவும் காலத்தையும் கணித்து சொல்லும் தெய்வமாக இருப்பார். ஆனால் இங்கு தனித்து நின்று காட்சி அளிக்கும் பைரவர் கிராமத்தை காக்கும் தெய்வமாக விளங்குகிறார்.


இவர்தான் எங்கள் ஊரின் (இரஙகாபுரம்) காவல் தெய்வம். வருடம் ஒரு முறை ஊரே அங்கு சென்று அவருக்கு பொங்கள் வைத்து வழிபட்டு அருள் வாக்கு வாங்கி வருவார்கள். அவரின் வாக்குப்படி (சாமியாடி) சொல்வது நடக்கும். இது ஒரு திருவிழா போல இன்றும் நடந்து வருகிறது. வருடம்தோரும் மே மாதம் இங்கு வந்து எங்கள் ஊர்மக்கள் வணங்குவது வழக்கமாக இன்றளவும் உள்ளது.

இந்த விழாவில் விசேசம் என்னவென்றால் பழம் கொடுப்பது. பைரவருக்கு அலங்காரம் முடிந்ததும் அவரின் தலையில் பூ வைத்து அதில் எலுமிச்சை பழம் வைப்பார்கள். அந்த பழம் தானாக் சுற்றி கையில் விழும்.




இதில் என்ன விசேசம் என்றால் ஒவ்வொரு வருடமும் ( நான் கன்ட வரையில்) எலுமிச்சை பழத்தை வைத்ததும் சிறிது நேரத்தில் ஒரு "ஈ" அங்கு பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தில் அமரும். சில வினாடிகள் அமர்ந்துவிட்டு பிறகு பறந்து சென்றுவிடும்.

அது பறந்து சென்றதும்தான் அந்த பழம் தானாக சுற்றி பிறகு கீழே விழும் அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துகொள்வர்.

இதற்கான அசைபட வீடீயோ என்னிடம் உள்ளது. அதை நான் ஒரு முறை என்னுடைய வீடீயோ கேமிராவில் பதிவு செய்துள்ளேன்.

அந்த அசைபடத்தை இந்த தலைப்பில் பாருங்கள்.

http://sivanarul-sivamayam.blogspot.de/2012/03/blog-post.html


வேலூரிலுர்ந்து செங்கானத்தத்திற்கு நேரடியாகவும் பேரூந்து வசதி உள்ளது. இரஙகாபுரத்தி இருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.


கன்டிப்பாக இந்த கோயிலுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கும். அதாவது சித்தர்களுக்கும் இவருக்கும் ஏதோ ஒரு பிணைப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு வேளை சித்தர்கள்கூட இந்த சிலையை அமைத்து இருக்கலாம் என்பது என் எண்ணமாக உள்ளது.

காள பைரவர் நித்தியமாய்






காள பைரவர் அலங்காரமாய்






அவருக்கு நிழல் தந்து மழையிலும் வெயிலிலும் காத்து நிற்கிறது அந்த மரம். நான் விசாரித்த வரையில் யாருக்குமே அந்த மரத்தின் வயது தெரியவில்லை. ஆனால் அனைவரின் கருத்து 100 , 200 வருடம் இருக்கும் என்று சொல்கிறார்கள். காரணம் அவர்கள் பிறந்ததிலிருந்தே இருக்குதாம் அந்த மரம்.

No comments:

Post a Comment