Monday, December 31, 2012

அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை


திருத்தணி: திருத்தணி அருகே நாவலூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அகத்தீஸ்வர, சாமிநாத குருக்கள் சிவனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். அலங்கரிக்கப்பட்ட சிவன் கோயிலை சுற்றி வலம் வந்தார். கோ பூஜை நடத்தினர்.
பிரதோஷ பூஜையில் திருத்தணி தாசில்தார் வளர்மதி, துணை தாசில்தார்கள் கல்யாணம், முனிசேகரன், செல்வகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், அலுவலக உதவியாளர் வெங்கடேசன், முன்னாள் விஏஓ அரிபிரசாத், கிராம உதவியாளர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

No comments:

Post a Comment