Monday, December 31, 2012

கலி கால தோஷம் நீங்க


துவாபர யுகம் முடிந்து, கலி யுகம் தொடங்க இருந்த நேரத்தில், பிரம்மாவிடம் சென்றார் நாரதர். `எங்கும் சுற்றி திரிந்து வரும் நான், கலி காலத்தை கடந்து செல்வது எப்படி' என்று பிரம்மனிடம் கேட்டார்.

அதற்கு பிரம்மர், `நாராயணனுடைய நாமத்தை சொன்ன மாத்திரத்தில் கலி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்' என்று கூறினார். அப்படிப்பட்ட மந்திரம் எதுவென்று தனக்கு உபதேசிக்கும்படி கேட்டார் நாரதர்.

ஹரே ராம, ஹரே ராம,
ராம, ராம, ஹரே ஹரே;
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண, கிருஷ்ண, ஹரே ஹரே.

இந்த பதினாறு நாமங்களையும் ஒன்று சேர்த்துச் சொன்னால் கலியின் தோஷம் நாசமாய் போய்விடும் என்று உபதேசம் செய்தார் பிரம்மதேவன். இந்த மந்திரத்திற்கு `மஹா மந்திரம்' என்ற சிறப்பும் உண்டு. 

No comments:

Post a Comment