Monday, December 31, 2012

பாவங்களை போக்கும் துளசியின் மகிமை


காடுமேடுகளில் எல்லாம் வளரும் தன்மை கொண்டது துளசி. இது ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து முடிவில் மோட்சத்தை அடைகிறார்கள். எந்த இடத்தில் துளசிச் செடி பிடி அளவேனும் இருக்கிறதோ அந்த இடத்தில் நாராயணன் போன்ற தேவர்கள் நித்தியாவாசம் செய்கிறார்கள்.

யாருடைய உடலானது துளசியினால் கொளுத்தப்படுகின்றதோ அவருடைய உடலானது சகல பாவங்களையும் நீக்கிக் கொள்கிறது. துளசி மாலையை அணிந்து கொண்டு யார் பிராணனை விடுகின்றனரோ, அவருடைய உடல் தொடர்பான பல பாவங்களும் போய் விடுகின்றன. அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment