Monday, December 31, 2012

கல்வி வரம் அருளும் கூத்தனூர் சரஸ்வதி


உலகத்து உயிர்களை தன் அருள் விளையாட்டால் ஆட்கொண்டு அருள்பாலிக்கும் அன்னை சரஸ்வதி அறிவுக்கு கடவுளாக விளங்குகிறாள். காளிதாசனுக்கு
சம்பூர்ண ராமாயணம் பாட அருள் செய்தவள். கம்பனுக்காக கிழங்கு விற்றவள். தமயந்தி நளனை தேர்ந்தெடுக்க உதவியவள். ஆதிசங்கரரின் பெருமைகளை வெளிப்படுத்த சரசவாணியாய் அவதரித்த நாமகள். இப்போதும் ஒரு பக்தனை ஆட் கொள்ள விரும்பினாள். கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலை மகளை பூசித் தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக சின வாகினி யாய் ஓடும் ஹரி சொல் மாநதி யின் நீரினால் அபிஷே கம் செய்து நாள் தோறும் அம்பிகை யை வழி பட்டு வந்தார்.

கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி
அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர், அதனாலேயே ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். சரஸ்வதிக்கென தனிக்கோவில் அமைந்திருப்பது நாகை மாவட்டம் கூத்தனூரில்தான். இங்கு சிவன் கோவிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோவில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவகிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை.

கருவறை யின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத் தின் இருப்பிடத்தை உலகோருக்கு உணர்த்துவதாய் அமைந்துள் ளது. இங்குள்ள நடராசர் சிலை அழகானதும் அற்புதமானதும் ஆகும். முயலவன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாக காணப்படுகிறான். அவன் முதுகின்மீது பெருமாள் தாண்டவமாடுகிறார். அடுத்து மகாமண்டபத்தின் இடப்பக்கம் வேதம் ஓதும் நான்கு திருமுகங்களுடன் கைகூப்பிய வண்ணம் பிரம்மா நிற்கும் கோலம் காண்பதற்கு உரியது. திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் கூத்தனூர் உள்ளது. 

No comments:

Post a Comment