Monday, December 31, 2012

சரஸ்வதி கோயில்




சரஸ்வதி பூஜை மாநவமி என வழங்கப்படுகிறது. குருபகவான் கல்விக்கு உரியவர். அவருக்கு உரிய தானியம் கடலை. எனவேதான் சரஸ்வதி பூஜையன்று
கடலை சுண்டல் நிவேதிக்கப்படுகிறது.

மைசூரில் பெரும்பாலானோர் மண்பொம்மைகளால் ஆன கொலு வைப்பதில்லை. வித விதமான அலங்காரங்களில் மரப்பாச்சி பொம்மைகளையே கொலுவில் வைக்கின்றனர்.

சரஸ்வதி தேவிக்கு சாக்த தந்திரங்கள் மகா சரஸ்வதி, லலிதோபாக்யானம் சியாமா, சியாமளா, மந்திரநாயிகா, சுகப்ரியா, சசிவேசானி, பிரதாநேசி, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாசினி, சதாமதா, சங்கீத யோகினி என பல பெயர்கள் உண்டு.

ஜைன மதத்தில் சரஸ்வதி வஜ்ர சார்தா, சுருதிதேவி, ஜீன சரஸ்வதி, ஜீனவாணி என்ற பெயர்களில் வழிபடப்படுகிறாள்.

No comments:

Post a Comment