Monday, December 31, 2012

மனித நிலையை உணர்த்தும் கொலு


நவராத்திரியின் சிறப்பு அம்சமே கொலு. பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும். இதில் கொலு
மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

முதலாம் படி: புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.

மூன்றாம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

நான்காம் படி: நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஐந்தாம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஆறாம் படி: ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஏழாம் படி: மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.

எட்டாம் படி: தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

ஒன்பதாம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கம்.

No comments:

Post a Comment