Monday, December 31, 2012

குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்



உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி தசரா விழா ஒவ்வொரு ஆண்டும்
பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று (24ம்தேதி) காலை 6மணி முதல் 10.30மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. கடந்த 9 நாட்களாக காளி, குறவன், குறத்தி, ராஜா, ராணி, போலீஸ், பெண், அனுமார், பாதிரியார் என பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

இரவு 11 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12மணி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசாசுரசம்காரம் செய்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (25ம்தேதி) அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகமும், காலை 6மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதலும், பகல் 12மணிக்கு அன்னதானமும், மாலை 5.30மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தலும், மாலை 6 மணிக்கு காப்பு களை தலும், நள்ளிரவு 12மணிக்கு சேர்க்கை அபிஷேகமும் நடக்கிறது.

No comments:

Post a Comment