Tuesday, January 15, 2013

Ayurvedic Treatment Tamil


ஆயுர்வேதம் அதர்வண வேதத்தின் சுயேச்சையான உபவேதம் என்று கருதப்பட்டாலும் மற்ற மூன்று வேதங்களிலும் அது சொல்லப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தின் தத்துவங்களை பஞ்ச பூதங்கள், (பூமி, நீர், நெருப்பு, காற்று, வெளி) மூன்று வகை நாடிகள் (வாதம், பித்தம், கபம்) இம்மூன்று வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற ஒரு உபவேதமான தனுர் வேதத்திலும் (போர் முறைகளை பற்றியது) உடலின் ‘மர்மஸ் தானங்கள்’ முதலியவை விளக்கப்பட்டுள்ளன.

ரிக் வேதத்தில் காலிழந்த ஒருவருக்கு, தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் செயற்கையாக இரும்புக்காலை பொறுத்தினார்கள் என்றும், கண்ணிழந்தவர்க்கு, பார்வை வரச் செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆயுர்வேதம் தனிமையாக, ஏட்டு வடிவில் வந்தது அதர்வண வேதத்தின் தோற்றத்துடன் தான், அதாவது, 3000 லிருந்து 2000 கி.மு. ஆண்டுகளில் இதில் 8 பிரிவுகள் சொல்லப்பட்டன.

ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 1500 கி.மு. வருடங்களில் ஆத்ரேயம் (வைத்தியர்கள்) தன்வந்திரி (அறுவை சிகிச்சை நிபுணர்கள்) என்று இரண்டாக பிரிந்தது. இந்த இரண்டு பிரிவுகளை பற்றிய நூல்கள் தான் சரகசம்ஹிதையும், சுஸ்ருதசம்ஹிதையும். மூன்றாவதான ‘அஷ்டாங்க ஹிருதயம்’ 500 கி.பி.யின் வாகபட்டாவால் உருவாக்கப்பட்டது. இது முதல் இரண்டு வகை பிரிவுகளின் தொகுப்பு.

No comments:

Post a Comment