Tuesday, January 15, 2013

குடலைக் கழுவ


ஆயுர்வேதத்தின் படி மூட்டு வலி போன்ற வாத நோய்களுக்கு முதலில் செய்ய வேண்டிய சிகிச்சை, மல பந்தத்தை போக்குவது. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு முதலில் திராக்ஷதி லேஹியம் போன்றவை தரப்படும்.
திராக்ஷதி லேகியம்
தேவையானவை
சூரத் நிலாவாரையின் இலைகள் - 100 கிராம் (ஆய்ந்தெடுத்தது)
ரோஜா மொக்கு - 400 கிராம் (இதழ்களை ஆய்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும்)
விதை நீக்கிய உலர்ந்த திராக்ஷ – 800 கிராம் (நீரில் கழுவி, வெய்யிலில்
உலர்த்தி காம்பையும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்).
செய்முறை
இந்த மூன்றையும் கையால் நன்றாக பிசைந்து, ஒன்றாக்கி, டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். ஒரு நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளரில் இட்டு, அது நிறைய கொதிக்கும் நீரை விட்டு இரவில் மூடி வைக்கவும். மறுநாள் காலை மருந்தை கசக்கி பிழிந்தெடுத்து விட்டு, கஷாயத்தை சிறிது சூடுபடுத்தி வடிகட்டி குடிக்கவும்.

அத்தி பழ பானம்
தேவையானவை
சீமை அத்திப் பழம் - 70 கிராம் (தேனில் ஊற வைத்தது)
ரோஜா மொக்கு - 140 கிராம்
சோம்பு - 70 கிராம்

செய்முறை
இந்த பொருட்களை வெந்நீரில் (4 லிட்டர்) 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் வைத்து நிதானமாக காய்ச்சி, பிறகு நன்கு பிசைந்து வடிகட்டவும். சர்க்கரை (1.7 கிலோ) சேர்த்து தேன் பதமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதை 60 மி.லி. அளவில் எடுத்து 60 மி.லி. நீருடன் சேர்த்து படுக்கும் போது குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

குறிப்பு
திராக்ஷதி லேகியம் வேறு பல மருந்துகளை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment