Saturday, January 12, 2013

இருப்பதை பிறருக்கு கொடுங்கள்...


இருப்பதை பிறருக்கு கொடுங்கள்

Mahaveerar


* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும். 
* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.

*
மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.

*
பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.

*
கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?

*
நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.

-
மகாவீரர்

No comments:

Post a Comment