Wednesday, January 9, 2013

கும்பக்கரை நீர்வீழ்ச்சி






தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் இதுவும்

ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே

பாய்ந்து கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையாக உள்ளது. மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில்

விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கிறது. நீரின் வேகம் அதிகமாகும் போது அருவியில் குளிப்பதற்குத் தடை

விதிக்கப்படுகிறது.

நீர்வீழ்ச்சியின் பகுதிகள்

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம்

என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று

தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப்

போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.

No comments:

Post a Comment