Wednesday, January 9, 2013

அருவிகள் கோவைக் குற்றாலம்


   


கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.

இந்த அருவி காருண்யா பல்கலைக்கழகம் காருண்யா பல்கலைக்கழகத்திலிருந்து 6 கி. மீ தொலைவில் உள்ளது. சடிவயல் சோதனைச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையிலிருந்து சிறுவாணி மற்றும் சடிவயல் செல்லும் பேருந்துகள் இங்கு செல்கின்றன. அருகாமையிலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் : பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், பாலார் மற்றும் ஆனமலை வனச்சரகம்.

No comments:

Post a Comment