Wednesday, January 9, 2013

ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா

ஆட்டுக்கறி - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு




செய்முறை:

ஆட்டுக்கறியைச் சிறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும். ஆட்டுக்கறியுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பிசறிக் குக்கரில் முக்கால் வேக்காடு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்தவுடன், கறித்துண்டுகளைச் சேர்த்து நன்கு வறுத்தெடுக்கவும். துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும் வரை வறுக்க வேண்டும். தற்போது 'சும்மா கும்முனு' ஆட்டுக்கறி மிளகாய்ச் சுக்கா ரெடி.
குறிப்பு
இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும். காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை. (எப்போதாவது ஒரு தடைவை என்றால் பாதகம் இல்லை). கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment