Wednesday, January 9, 2013

அலைமோதும் கூட்டம் மே 31 வரை ஊட்டி ‘ஹவுஸ்புல்’


ஊட்டி, : ஊட்டியில் கோடை விழா களைகட்டியுள்ளது. இதன் எதிரொலியாக இம்மாத இறுதி வரை பெரும்பாலான ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் 31ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடாமல் வருபவர்கள் இடம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்ட கோடை விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. கோடை சீசன் துவங்கியது முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

கோடை விழா துவங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களில் பல லட்சம் பயணிகள் குவிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலானோர் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மலை ரயில் முன்பதிவு ஜூன் 15ம் தேதி வரை நிறைவு பெற்றுள்ளது.

அதுபோல் சுற்றுலா தலங்களை காண திட்டமிட்டு வாகனங்களில் வரும் பயணிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டங்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 31ம் தேதி வரை ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டு விட்டது. அறை கிடைக்காமல் வருவோர் வாகனங்களிலேயே இரவு பொழுதை சாலையோரங்களில் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.

No comments:

Post a Comment