Wednesday, January 9, 2013

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்


நீலகிரி

மலைகளின் அரசியான ஊட்டி இருக்கும் மலைத் தொடர்ச்சி தான் நீலகிரி. நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால்,'நீலகிரி' என அழைக்கப்படுகிறது.மலைகளின் அரசியான ஊட்டி சுற்றுலா

பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது.உடலை வருடும் இதமான தென்றல், பச்சைப்பசலென நீண்ட நெடிய அரிய வகை மரங்கள், அதனை சுற்றி படர்ந்துள்ள செடி, கொடிகள் இவையெல்லாம்

ஊட்டியின் அக்மார்க் முத்திரைகள்.உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன..கிழக்கில் கோயம்புத்தூர், பெரியார் மாவட்டங்களையும்; மேற்கிலும், தெற்கிலும்

கேரள மாநிலத்தையும்; வடக்கில் கர்நாடக மாநிலத்தையும் கொண்டு விளங்குகிறது நீலகிரி. மொத்தத்தில் நீலகிரியை மலைவாசஸ்தலங்களின் ராணி என்றும் சொல்லலாம்.

பிளாக் தண்டர்

உதகை மலையடிவாரத்தில் இதமான சூழலில் ஊட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பிளாக் தண்டர் என்னும் கேளிக்கை பூங்கா.இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழத்தக்க

வகையில் பல்வேறு வகையான தண்ணீர் விளையாட்டுகளும்,பொழுது போக்கு விளையாட்டுகளும் அதிகம் உள்ளன.இங்கு பொருட்களை பாதுகாப்பதற்காக ஒரு தனிப்பட்ட அறை ஒன்றும்

வழங்கப்படுகிறது.இங்குள்ள அனைத்து விளையாட்டுகளையும் காணும் வகையில் வழிகாட்டி ஒருவர் உடன் வருவார்.இங்கு வருபவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.இது கோயமுத்தூர் அருகில்

ஊட்டிக்கு செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.மேட்டுபாளையம் இரயில் நிலையத்திலிருந்து 4.4 கீ.மீ தொலைவில் பிளாக் தண்டர் அமைந்துள்ளது.பிளாக் தண்டரிலிருந்து 4.1கீ.மீ தொலைவில்

அமைந்துள்ளது மேட்டுபாளையம் இரயில் நிலையம்

குன்னூர்

உதகை நோக்கி மலையில் பயணிக்கும் போது 20 கீ.மீ தொலைவில் குன்னூர் நகரம் உள்ளது.உதகையில் சில நாட்கள் தங்கி இருந்து,பார்த்து வர விரும்புவோர் குன்னூரில் தங்கி கொள்ளலாம்.இதன்

மூலம் விடுதி தொகையை ஓரளவு சிக்கன படுத்தலாம்.பார்த்து பரவசபட பல இடங்கள் உள்ளன குன்னூரில்.சிறுவர்களுக்கேற்ற பூங்காக்களும் அமைந்துள்ளது.

சிம்ஸ் பூங்கா

தமிழக தோட்டகலை பராமரிப்பிலுள்ள சிம்ஸ் பூங்கா குன்னூரின் மேல் பகுதியில் உள்ளது.அழகாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிப் பாதைகள், அழகிய மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகள்,

செடிகள், மரங்கள் என இயற்கையின் சுரங்கம்போல் காட்சியளிக்கும்.இந்த பூங்காவில் கண்னை கவரும் பூக்களும் அழகிய தோட்டங்களும் அமைந்துள்ளன.இங்கு பங்குனி மாதங்களில் காய்கறிகள்

கண்காட்சி நடைபெறும்.கட்டணம் பெரியவர் ரூ.5 சிறியவர் ரூ.2.கேமரா ரூ.25. வீடியோ கேமரா ரூ.500.

லாஷ் நீர்வீழ்ச்சி

குன்னூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அருவி பாறைகள் நிறைந்தது. பார்த்து ரசிக்கலாம். குளிக்க முடியாது.அடர்ந்த மலைகளும் காடுகளும் நிறைந்த இந்த லாஷ் நீர்வீழ்ச்சி இயற்கையை

இரசிப்போருக்கான ஒரு இடம் இயற்கையை இரசிப்போருக்கு இங்கிருந்து நகர மனம் வராது.

லாம்ஸ் பாறைமுனை

பாதுகாக்கபட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள லாம்ஸ் பாறைமுனை குன்னூரிலிருந்து 8 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.இங்கிருந்து பார்த்தால் புலியாறு,காட்டாறு, தேயுலை தோட்டங்களையும்

மனங்குளிற கண்டு களிக்கலாம்

பகாசூரன் மலை

குன்னூரிலிருந்து சுமார் 12 கீ.மீ தொலைவில் உள்ள இம்மலை அழகிய வனச்சூழலில் அமைந்துள்ளது.மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்கு உள்ளது.

காட்டேரி அருவி

உதகையில் உள்ள மனங்கவரும் நீர்வீழ்ச்சிகளில் ஒன்று.நீலகிரி மலையின் முன்றாவது பெரிய அருவி, 60மீ. உயரத்திலிருந்து விழும் இந்த அருவி குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ.

தொலைவில் குந்தா சாலையில் உள்ளது.

டால்பின் நோஸ் காட்சி முனை

குன்னூரில் இருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில் உள்ளது டால்பின் நோஸ் காட்சி முனை. .இங்கிருந்து மேட்டுபாளையத்தின் எழிழ்மிகு தோற்றத்தையும் கோத்தகிரியின் நீர்வீழ்ச்சியின் அழகையும், கண்டு

களிக்கலாம்.இதற்கு அருகிலுள்ள புலிமலையின் பனி சூழ்ந்த அழகும் மனதை கவருவதாகும்.இங்கிருந்து பார்த்தால் வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டாற்போல விழும் கேதரின் அருவியின்

அழகை ரசிக்கலாம். அதுவும் காலை நேரத்தில் இக்காட்சி முனைக்கு வந்தால் பரவசம்தான்.

கோத்தகரி

நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது சிறிய நகர் கோத்தகிரி.உதகையிலிருந்து சுமார் 31 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.அழகிய தேயிலை தோட்டங்களும் வனப்பகுதிகளும் பளிங்குத் தண்ணீரும்

மனதை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்ததே இந்த கோத்தகிரி

கொடநாடு காட்சி முனை

இமை கொட்டாமல் இரசிக்கும் இயற்கை அழகை கொண்டது கொடநாடு காட்சி முனை.நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் நதியின் பேரழகை இந்த முனையிலிருந்து கண்டு

ரசிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடகம் மாநில எல்லைகளையும் கண்டு களிக்கலாம். கோத்தகிரியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதியில்தான் கொடநாடு தேயிலைத் தொழிற்சாலை

உள்ளது. உச்சிப் பொழுதில் இந்த முனையில் நின்றபடி பார்த்தால் நீலகிரி மலைத்தொடரின் நீண்டு உயர்ந்த தோற்றம் முழுமையாகத் தெரியும்.

ரங்கசாமி பீக் அண்ட் பில்லர்

கீழ் கோத்தகிரி வழியாக இந்த இடத்தை அடையலாம். கோத்தகிரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. கூம்பு வடிவமான இந்த உச்சியில் இருந்து பார்த்தால் வனத்தின்

ஆழ்ந்து கிடக்கும் அழகையும் சுற்றிலும் பரந்து விரிந்து கிடக்கும் கிராமப்புறச் சூழலையும் கண்டு களிக்கலாம். கடல் மட்டத்திலிருந்து 1785 மீ உயரத்தில் இருக்கும் இந்த உச்சியில் இருளர் பழங்குடி

மக்கள் வாழ்கிறார்கள்.

தாவரவியல் பூங்கா

ஊட்டிக்கு வரும் பயணிகள் முதலில் ஆர்வமாக காணும் இடம் தாவரவியல் பூங்கா தான் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடமில்லை. பூங்காவில் நடக்கும்போது பஞ்சு மெத்தையில் நடப்பது

போன்ற இதமான சுகத்தை அனுபவிக்கலாம்.கண்ணை கவரும் அழகிய பூங்கா தாவரவியல் பூங்கா.எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போல செடிகள்.......... அதன் மேல் படுத்துறங்கும் மலர்கள்...

...வானைத்தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும் மூலிகைகளும் மரங்களும்................ பார்பதற்கே அழகான காட்சி... கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும்

இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செம்மொழிப்பூங்கா என்ற பெயரில் தாவரவியல் பூங்கா

அமைந்துள்ளது.

ஊட்டி ஏரி

தாவரவியல் பூங்காவிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது ஊட்டி ஏரி.மனதை கொள்ளை கொள்ளும் ஊட்டி ஏரி உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 178 ஆண்டுகள் கடந்து விட்டன.ஏரியில் படகு சவாரி

செய்து மகிழலாம்.அதற்கு தேவையான படகுகளும் இங்கு உள்ளது.இதன் அருகில் மனமகிழ் பூங்கா ஒன்று உள்ளது....சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மகிழத்தக்க வகையில் பல சிறப்பம்சங்கள் இங்கு

அமைந்துள்ளது. ஊட்டி படகு இல்லத்துக்கு செல்ல ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகில் பயணம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். படகில் பயணம் செய்ய

மாணவமாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு..

சிறுவர் பூங்கா

ஏரியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பூங்காவில் பச்சைப் பாய்போல் விரிந்துக் கிடக்கும் புல்வெளி... பூக்களின் போர்வையால் மூடப்பட்டது போல் ஏரியின் நீர்ப்பரப்பெங்கும் மிதக்கும் மலர்க் கூட்டம்.

சிறிது தூரத்தில் இயற்கை எழில் சூழ நிமிர்ந்து நிற்கும் புனித தோமையர் தேவாலயம் தீப்பெட்டிகளின் வரிசையைப் போல் ஊர்ந்து செல்லும் மலை ரயில் படகுச்சவாரி குதிரைச் சவாரி என சிறுவர்களின்

நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகிய பூங்கா சிறுவர் பூங்கா.

குதிரை பந்தய மைதானம்

இந்தியாவின் புகழ் பெற்ற குதிரைப்பந்தய மைதானங்களில் ஊட்டி குதிரைப்பந்தய மைதானமும் ஒன்று. சுமார் 2.4 கி.மீ நீளம் கொண்டது. ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் இங்கு குதிரைகளின்

குளம்பொலிகள் கேட்கும்.கோடை காலங்களில் இங்கு பந்தயம் நடைபெறுகிறது.சுளீரென்று வெயில் அடித்தாலும் அதுவும் நமக்கு சுகம்தான். நகரம் முழுவதும் “ஏ.சி.” பொருத்தியது போல் எப்போதும்

“குளு குளு” வென இதமான தட்பவெப்பநிலை நிலவுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்கிறது.

கேட்டி பள்ளதாக்கு

உலகின் அழகிய பெரிய பள்ளதாக்குகளில் ஒன்றான கேட்டி உதகை நகரிலிருந்து சுமார் 5.கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது.இங்கிருந்து பார்த்தால் ஏராளமான குட்டிக் கிராமங்களையும்,கோவையின் எழில்

தோற்றங்களையும் கண்டு இரசிக்கலாம்.சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்சில் 30 ரூபாய் கட்டணம்

செலுத்தினால் போதும் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் முக்கிய பகுதிகளுக்கு சென்று வரலாம்.

கல்கட்டி அருவி

ஊட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இருக்கும் கல்கட்டிமலைத் தொடரில் 50 மீ உயரத்தில் இருந்து விழும் அற்புத அருவி இது. செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இந்த அருவியில் நீர்

துள்ளிக் குதித்து வெள்ளமாய் வந்து விழும். ஊட்டிக்கு ஒருமுறை வந்து விட்டால் போதும். ஆண்டு தோறும் இங்கு வரவேண்டும் என்று ஆசை ஏற்படும். அந்த அளவுக்கு இயற்கையின் வனப்பு

கொட்டிக்கிடக்கிறது.

அவல£ஞ்சி:

இந்த இடம் ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல்பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. இந்த வழியில்தான் எமரால்டு ஃபாரஸ்டும் இருக்கிறது.இந்த இடத்திற்குச் செல்லும் ஒவ்வொரு

திருப்பத்திலிருந்தும் பார்த்தால் அற்புதமான அழகிய வனக் காட்சிகள் தெரியும். அவலஞ்சி என்று அழைக்கப்படும் இந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால் நீண்டு வளைந்து நீர்க்கோடு போல் ஓடும் நதியும்

பசுமையின் குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும் பளிச்செனத் தெரியும்.பார்பதற்கே அழகு நிறைந்தது இந்த அவலஞ்சி

மேல் பவானி

இயற்கையின் அழகை ரசிக்கத் தெரிந்தவர்கள் கட்டாயம் பார்த்து மகிழ வேண்டிய இடம் இது. ஊட்டியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் கோர குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும்

அவலஞ்சியில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இயற்கை எழிலின் தொட்டில் தான் மேல்பவானி. காட்சி உயிர்கள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

முக்குர்தி நேஷனல் பார்க்

நீலகிரி மலையின் உயரத்தில் அமைந்துள்ள பூங்கா. நீலகிரி பையோஸ்பியரின் ஒரு பகுதி. ஊட்டியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தத் தேசியப் பூங்காவுக்கு, பர்சன் வேலி, போர்புமண்ட்,

பைகாரா போன்ற பகுதிகளில் இருந்து வண்டிப் பாதைகள் உள்ளன. இங்குள்ள ஆறுகளிலும் மூக்குர்தி ஏரியிலும் மீன்பிடித்து மகிழலாம். பிப்ரவரி முதல் மே மாதம் வரை இந்தப் பகுதியில் சுற்றுலாச்

செல்ல உகந்த காலங்களாகும். கண்ணாடி போன்ற தண்ணீர் அழகிய பரவசமளிப்பவை.

அருங்காட்சியகம்

ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் வழியில் உதகை நகரின் க்ளப் சாலையில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது .இந்த அருங்காட்சியகம். 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊட்டியில் இந்த

அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில்

காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள், நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன. மேலும் ஊட்டியில் இருந்து

மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது. இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும்

இடம்பெற்றுள்ளன. மாவட்டத்திற்கே உரிய மரங்கள், வண்ணத்துப் பூச்சிகள், செதுக்கு வேலைகள், பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர், கல் சிற்பங்கள், வெண்கல வேலைப்பாடுகள்,

தோடர் இன மக்கள் இல்லத்தின் வகை மாதிரி மற்றும் பழமையான நாணயங்கள் என அனைத்தும் பாதுகாக்கபடுகின்றன

தொட்டபெட்டா:

கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 8640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உதகை ரயிலடியிலிருந்து 10. கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் உச்சிவரை செல்ல நல்ல சாலைகள் உண்டு. இங்குள்ள

கண்ணாடி அறையிலிருந்து இயற்கைக் காட்சிகள் ரசிக்கலாம்.இங்கிருந்து உதகை,கூனுர், வெலிங்டன், குந்தா, கோயம்புத்தூர் முதலிய இடங்களைப் கண்டு கழிக்கலாம்.இங்குள்ள தொலை நோக்கியின்

மூலம் புகழ்பெற்ற மலைச்சிகரத்தை காணலாம்.. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன்

ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குதான் உதகமண்டலம். ஊட்டியிலிருந்து 8 கி.மீட்டரில்

அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் கிழக்கு தென் கிழக்காக அமைந்துள்ளது. மேற்கு நிலப் பகுதியில் வடக்கு தெற்காக நீளும் மலைத்தொடரில் தொட்டபெட்டாதான் உயரமான சிகரம். தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான

சுற்றுலாத் தலம் ஆகும்.

பைகாரா நீர்வீழ்ச்சி

இம்மாவட்டத்திலேயே பெரிய ஆறு இதுதான். இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். முக்குர்தியின் உச்சியிலிருந்து புறப்படும் இந்த

பைகாரா ஆறு வடக்குப் பக்கமாகப் பரவி ஓடுகிறது. இந்தப் பகுதியின் முனையைத் தொடும் இடத்தில் மேற்காகத் திரும்புகிறது. இடையில் பல இடங்களில் அருவியாகக் கீழிறங்குகிறது. கடைசியாக

இரண்டாகப் பிரிந்து விழும் இடத்துக்குத் தான் பைகாரா அருவிகள் என்று அழைக்கின்றனர். இதில் ஒன்று 55 மீட்டர் உயரத்தில் இருந்தும் இன்னொன்று 61 மீட்டர் உயரத்திலிருந்தும் வீழ்கின்றன.

ஊட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த அருவிகள் இருக்கின்றன. பைகாரா அணைக்கட்டின் அருகில் அழகிய படகு இல்லம் ஒன்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது.

இந்த வளாகத்தில் லேக் பார்க் ஜாலி உலகமும் இருக்கிறது.பைகாரா நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களுக்கு குதுகலமான ஒன்றாக விளங்குகிறது.

தவளைமலை பார்வைமுனை

உதகையிலிருந்து 15 கீ.மீ தூரத்தில் தவளை மலை பார்வை முனை உள்ளது.இங்கிருந்து பார்த்தால் தவளையின் வடிவில் மலையொன்று காட்சியளிப்பதால் இவ்விடம் இப்பெயரை பெற்றது.அழகான

வனப்பகுதிகளையும் முதுமலை விலங்குகள் சரணாலத்தையும் இங்கிருந்தே பார்க்கமுடியும்

உதகை ஏரி படகு இல்லம்

1824 ஆம் ஆண்டு இங்கு செயற்கை ஏரி நிறுவப்பட்டது. இங்கு படகு சவாரியும், மினி ரயில், குழந்தைகள் பூங்கா ஆகியவையையும் உண்டு. ஊட்டியின் முதல் ஆணையராக இருந்த ஜான் சல்லிவன்

என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823 முதல் 1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள்

போன்றவற்றை இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம். அதுமட்டுமா... மினி ரயில், டான்சிஸ் கார்கள் என்று குட்டீஸ்களின் குதூகலத்தக்குப் பஞ்சமே இல்லை. தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக்

கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஊசிமுனைப் பாறை

உதகையிரிருந்து சுமார் 41 கீ.மீ தொலைவில் உள்ள ஊசிமுனைப்பாறை பகுதியிலிருந்து அற்புதமான பள்ளதாக்குக் காட்சிகளையும் முதுமலை சரணாலயத்ததையும் கண்டு இரசிக்கலாம்.சூரியன்

மறைவதை இங்கிருந்து பார்த்தால் அது மனதை விட்டு மறையாது
இதில் பயணிக்கும் போது கொண்டை ஊசியின் வளைவு போல் காணப்படும்.

முதுமலை வனவிலங்கு சரணாலயம்

இந்தியாவின் முதல் வனவிலங்குக்கு சரணாலயம் மூன்று மாநிர எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது .ஜவஹர்லால் நேரு பூங்காவின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது. எப்போதும்

பசுமையாக இருக்கும் வெப்ப மண்டல காட்டில் இந்தச் சரணாலயம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புள்ளிமான், கோழையாடு, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளும் கொம்பிறகுப்

பறவை, குயில் வகைகள், காட்டு கோழிகள் போன்ற உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ முடியும். யானைச்சவாரி மூலமாகவோ ஒதுக்கப் பட்ட பாதையில் வாகனத்தின் மீதோ சென்று இந்தக் காட்டை

கண்டு களிக்கலாம். ஊட்டியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் இந்தச் சரணாலயம் உள்ளது. தொலைபேசி எண்; 0423252635.

ரோஸ் பூங்கா

நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது.

முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000 க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில

மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.

பொட்டாணிக்கல் கார்டன்:

1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. பச்சை பசலேன

தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம். இத்தாலிய

வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க்

கண்காட்சி நடைபெறும்.

ரோஸ் கார்டன்

நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது ரோஸ் கார்டன். மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது.

முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில

மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம். தமிழக தோட்டக்கலைத்துறையால் ரோஸ் கார்டன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏரி பூங்கா

ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின்

வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா. மேலும் 1978ஆம் ஆண்டு

கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.

மான் பூங்கா

ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா. இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று. ஊட்டியின் அருமையான

வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது. 1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம்

பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது. தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

படகு இல்லம்

ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க

குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள், குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.

தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.

மலை ரயில்

நீலகிரி மலை ரயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில்

ரம்மியமான வானிலையையும், ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.

தூரப்பள்ளி தொங்கு பாலம்

கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்தத் தொங்கு பாலம் இருக்கிறது. கூடலூரின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று.

நெல்லியாலம்

கூடலூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த ஊசிப்பாறை உருண்டு கொண்டுள்ளது. இந்த முனையிலிருந்து 360 டிகிரி கோணத்திலும் சுற்றிப் பார்க்க முடியும். சூரியன் மறையும் காட்சியை

இங்கிருந்து பார்த்தால் அதிசயமாகத் தோன்றும்.

பண்டலூர்

கூடலூரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த இடத்தில் தங்கச் சுரங்கம் இருந்ததாக நம்பி ஏமாந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலத்தில் பண்டலூர்

ராணியின் ஓய்விடமாக இருந்துள்ளது. ஒருகாலத்தில் பழங்குடி இன மக்களின் புனிதத் தலமாகவும் கருதப்பட்டுள்ளது.கோடைவிழா: மலர்க் கண்காட்சி, படகுக் கண்காட்சி, நாய் கண்காட்சி ஆகியவை

உதகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் நடக்கும் கோடைவிழாவின் அம்சங்களாகும்.தேநீர்த் திருவிழா: ஜனவரி மாத இறுதியில் நடக்கும் இவ்விழாவில் விதவிதமான தேநீரை சுவைக்கலாம். இது ஒரு

தேநீர் விருந்தோம்பல் விழா.

சேரம்பாடி

கூடலூரில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் மேற்குப் புறத்தின் கடைக்கோடியில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு மிகப்பெரிய தாவரத் தோட்டமும் மைக்கா சுரங்கமும் உள்ளன. சுல்தான் காப்ரண் இதற்கு

மிக அருகில் தான் உள்ளது.

தேவலா

ஊட்டி கூடலூர் சாலைக்குச் செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் இந்த இடம் உள்ளது. வயநாடு மற்றும் கருகூர் மலைத்தொடருக்கு இடையில் இந்த இடம் உள்ளது. இதன் அருகில் உள்ள

பகுதிகளில் தங்கம் கிடைத்ததாகவும் அதற்காகப் பழங்குடி மக்களுக்கு இடையே சண்டை நடந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு.

லாங் உட் சோலை

பருவநிலை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பகுதியில் நிலவும் பருவ நிலையே உதாரணம். எனவேதான் உலகின் இலட்சிய பூர்வமான பருவநிலைச் சூழல் உள்ள இடமாக இது

கருதப்படுகிறது. இங்கு நிலவும் நுண்பருவ நிலைச் சூழலே இதற்குக் காரணம். கோத்தகிரி நகர மக்களின் குடிநீர்த் தேவையை இந்தப் பகுதிதான் நிறைவு செய்கிறது.

டைகர் ஹில்

தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு 3 கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. ஆன்மிகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில்

காணப்படுகிறது.

மோயர் அருவி

கூடலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள முதுமலை வன விலங்கு காப்பகத்திற்குள் இந்த அருவி உள்ளது.

No comments:

Post a Comment