Wednesday, January 9, 2013

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து



தென்காசி, :குற்றாலத்தில்இந்த ஆண்டு சீசன் வரலாறு காணாத அளவுக்கு ஏமாற்றி விட்டது. பெரும்பாலான நாட்கள் சாரல் இல்லாததுடன் சுள் என வெயில் அடித்தது. ஆகஸ்ட் மாதத்துடன் சீசன் நிறைவு பெற்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களாக சற்று இதமான சூழல் நிலவியது. பலத்த காற்றும் இடையிடையே இதமான சாரலும் காணப்பட்டது.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிகளில் இரவில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலியருவி மற்றும் பழையகுற்றாலத்தில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment