கொடைக்கானல்: கல்விச் சுற்றுலாவால் கொடைக்கானலில் குளிர்கால சீசன் களைகட்டியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற் போது அதிகாலை முதல் லேசான வெயிலும், மாலை யில் இதமான குளிரும் நிலவி வருகிறது.
இந்த குளிர்கால சீசனை அனுபவிக்க வட நாட்டு சுற்றுலாப் பயணி கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இங்கு வருகின்றனர்.
இதன் காரணமாக கோ க்கர்ஸ் வாக்ஸ், பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பா றை, மோயர்பாய்ன்ட், பை ன்பாரஸ்ட் போன்ற இயற் கை எழில்காட்சிகளிலும், பல வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்காவிலும், படகுசவாரி செய்யும் படகு குழாம் மற் றும் ஏரிச்சாலைகளில் மா ணவர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக ஏரிச் சாலை மற்றும் இயற்கை எழில்காட்சி உள்ள இடங்களிலும் அழகு சாதனப்பொருட்கள், குளிர்சாதன ஆடைகள் அதிகளவில் விற் பனையாகின்றன. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த குளிர்கால சீசனை அனுபவிக்க வட நாட்டு சுற்றுலாப் பயணி கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இங்கு வருகின்றனர்.
இதன் காரணமாக கோ க்கர்ஸ் வாக்ஸ், பசுமைப்பள்ளத்தாக்கு, தூண் பா றை, மோயர்பாய்ன்ட், பை ன்பாரஸ்ட் போன்ற இயற் கை எழில்காட்சிகளிலும், பல வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்காவிலும், படகுசவாரி செய்யும் படகு குழாம் மற் றும் ஏரிச்சாலைகளில் மா ணவர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக ஏரிச் சாலை மற்றும் இயற்கை எழில்காட்சி உள்ள இடங்களிலும் அழகு சாதனப்பொருட்கள், குளிர்சாதன ஆடைகள் அதிகளவில் விற் பனையாகின்றன. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment