Wednesday, January 9, 2013

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 24 ஆயிரம் பேர் குவிந்தனர்


ஊட்டி, :ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட 3 நாள் விடுமுறையை முன்னிட்டு கேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஊட்டி தாவரவியல் பூங்கா களைகட்டியது. ரம்ஜானை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதிக வாகனங்களின் வரவால், ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பபட்டது. ஓட்டல், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் நிரம்பி வழிந்தன. ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த சனிக்கிழமை 6 ஆயிரத்து 100 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரத்து 500 பேரும், நேற்று மதியம் வரை சுமார் 6 ஆயிரம் பேரும் வந்திருந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் 10 ஆயிரமாக உயரலாம் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment