Wednesday, January 9, 2013

நீலகிரியில் 2வது சீசன் ஜோர்


குன்னூர்,:நீலகிரியில் தற்போது 2வது சீசன். நவம்பர் வரை சீசன் நீடிக்கும். மாவட்டம் முழுவதும் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்து குலுங்கி வருகின்றன. காலாண்டு விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிய துவங்கியுள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 8 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, டேலியா உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிறுவர் பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர். வடமாநில சுற்றுலா பயணிகளும், புதுமணத் தம்பதிகளும் அதிகளவில் வந்திருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஒரு லட்சம் மலர் செடிகளும், காட்டேரி பூங்காவில் 25 ஆயிரம் மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இங்கு நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள், பூத்து குலுங்கிய மலர்களை ரசித்து பார்த்தனர். டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் ஆகிய காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment