Wednesday, January 9, 2013

உலக சுற்றுலா தினம்



ஊட்டி, ; நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுற்றுலா தினம், ஊட்டியில் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ரயில் நிலையம், பஸ்நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்க படுவர்.

அவர்கள் கண்டுகளிக்க பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படும்.மேலும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவியருக்கு, சுற்றுலா குறித்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து, ஊட்டி படகு இல்லத்தை தூய்மை படுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சிறப்பு சலுகைகளை அளிக்க, மற்றும் சுற்றுலா பயணிகளை முகமலர்ச்சியுடனும், பாரம்பரிய முறைப்படியும் வரவேற்று உணவு வழங்கி மகிழ வைக்கவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment