Wednesday, January 9, 2013

குற்றாலத்தில் குளிக்க தடை


தென்காசி, :கேரளாவின் தெற்கு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 1 வாரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின்அருவியில் நேற்று மதியம் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க போலீசார் தடைவிதித்தனர். ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகம் விழுகிறது. 

No comments:

Post a Comment