கோவை, : புத்துணர்வு முகாமில் யானைகளின் சேட்டைகளை காண மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் தமிழக கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கி நேற்றுடன் 7 நாட்கள் நிறைவடைந்தது. கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பலர் யானைகள் முகாமை பார்க்க கூட்டம் கூட்டமாக வருகின்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை, விடுமுறை நாளாக இருந்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. யானைகளை பக்கத்தில் சென்று பார்வையிட முடியாத பொதுமக்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியின் அருகே குவிந்தனர்.யானை பாகன்களில் ஒருவர் கூறுகையில், “பல்வெறு பகுதிகளிலிருந்து வந்துள்ள யானைகள் ஒன்றுடன் ஒன்று நன்றாக பழகி வருகிறது. அனைத்து யானைகளும் சீரான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் இம்முகாம் யானைகளுக்கு சிறப்பாக அமைந்துள்ளது‘‘, என்றார்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. யானைகளை பக்கத்தில் சென்று பார்வையிட முடியாத பொதுமக்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியின் அருகே குவிந்தனர்.யானை பாகன்களில் ஒருவர் கூறுகையில், “பல்வெறு பகுதிகளிலிருந்து வந்துள்ள யானைகள் ஒன்றுடன் ஒன்று நன்றாக பழகி வருகிறது. அனைத்து யானைகளும் சீரான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் இம்முகாம் யானைகளுக்கு சிறப்பாக அமைந்துள்ளது‘‘, என்றார்.
No comments:
Post a Comment