Wednesday, January 9, 2013

ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்


 

ஊட்டி, : பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், 2வது சீசன் களைகட்டியுள்ளது.வெயில் மற்றும் மின்வெட்டில் இருந்து தப்பிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அனைத்து லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன.

கூட்டம் அலைமோதுவதால், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு, போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ் இயக்க துவங்கியுள்ளது. முக்கிய கடை வீதிகள் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஊட்டி கமர்சியல் சாலை, பூங்கா சாலை போன்ற பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை போன்று 8,500 மலர் தொட்டி தயார் செய்யப்பட்டு அலங்கார மேடைகளில் வைக்கப்பட்டுள்ளது. மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் நிலவும் இதமான கால நிலையால் வெளியூர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment