Wednesday, January 9, 2013

சுற்றுலா பயணிகள் வராததால் பைக்காரா அணை வெறிச்சோடியுள்ளது


ஊட்டி, :ஊட்டி அடுத்த பைக்காரா அணையில் 19 மோட்டார் படகுகள், 3 அதிவேக மோட்டார் படகுகள், 9 மிதிபடகுகள் இயக்கப்படுகின்றன. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீரின் அளவு குறையும்போது மிதி படகுகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மிதி படகுகள் இயக்க பைக்காரா அணையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மே இறுதி வாரத்தில் மழை காரணமாக பைக்காரா அணை, ஜூனில் முழு கொள்ளளவை எட்டுவது வழக்கம். இம்முறை மழை இல்லை.
மூன்று மாதங்களாக பைக்காரா அணையில் தண்ணீர் மட்டம் உயராத நிலையில் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் விரும்புவதில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. 

No comments:

Post a Comment