Tuesday, January 8, 2013

லட்டு


தேவையான பொருட்கள்:


கடலை மாவு - 2 கப்
தண்ணீர்-3/4கப்
சீனி - 11/2 கப்
தண்ணீர்-3 கப்
முந்திரி பருப்பு – 8
கிஸ்மிஸ் -8
ஏலக்காய்பொடி- 1/4தேக்கரண்டி
சோடா உப்பு-ஒரு சிட்டிகை
நெய் - 2தேக்கரண்டி
உப்பு- சிட்டிகை
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
எண்னைய் - அரை லிட்டர்
செய்முறை:

கடலை மாவில் உப்பு. சோடா உப்பு சேர்த்து தண்ணீர்-3/4கப் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும்.பூந்தி ரெடி.

இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சீனி,ஏலக்காய்பொடி,மஞ்சள் கலர் பொடிபோட்டு சீனிநன்கு கரையும் வரை கிண்டவும் அதில் செய்து வைத்த பூந்தியை போட்டுகிளரவும்
பின்னர் ஒரு சிறிய சட்டியில் நெய் ஊற்றி அதில் கிஸ்மிஸ்,முந்திரி வறுத்து பூந்தியில் போட வேண்டும்
சூடு ஆறியது மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்து கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும்.

No comments:

Post a Comment